ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.9. 50 லட்சம் மோசடி .கணவன்- மனைவிக்கு வலை…

ராமநாதபுரம் மாவட்டம்,கலெக்டர் அலுவலக ரோட்டில் உள்ள மீனாட்சி நகர்,2வது வீதியைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் மாலை கண்ணன்(வயது 36)இவர் கோவைப்புதூர் தொட்டராயன் கோவில் வீதியில் வசித்து வந்தார்..இவருக்கு கோவையைசேர்ந்த ஜெரால்டு ரூபன்( வயது 45) அவரது மனைவி ரூபா ( வயது 40) ஆகியோர் அறிமுகமானார்கள். அவர்கள் தங்களுக்கு மத்திய அரசு பணியில் உள்ள உயர் அதிகாரிகளை நன்கு தெரியும். அவர்கள் மூலம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்கள் .இதை நம்பிய மாலை கண்ணன் ரூ 9 லட்சத்து 50 ஆயிரத்தைவங்கி கணக்கில் அவர்களுக்கு கொடுத்தார்..5 ஆண்டுகள் ஆகியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.இது குறித்துமாலைக் கண்ணன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்மோசடி வழக்கு பதிவு செய்து ஜெரால்டு ரூபன், அவரது மனைவி ரூபா ஆகியோரை தேடி வருகிறார்.