பைக்மீது அரசு பஸ் மோதி ஒருவர் சாவு…

கோவை ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் பத்மநாபன் ( வயது 36) நேற்று இவர் கோவை ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவரது பைக் மீது மோதியது . இதில் பத்மநாபன் படுகாயம் அடைந்தார் .அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அரசு பஸ் ஓட்டி வந்த சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..