கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாணம் – குண்டம் திருவிழா.!!

கோவை ஒண்டிபுதூர்,காமாட்சிபுரத்தில் 51 சக்தி பீடம், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.இங்கு 43 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் மகா உற்சவம் குண்டம் திருவிழா கடந்த 22 ஆம் தேதி முதல் நேற்று 28ஆம் தேதி வரை நடந்தது.நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன் – விஜயா ஆகியோர் தலைமையில் நடந்தது.

இதை காமாட்சிபுரி ஆதீனம் ஞானகுரு சாக்தஸ்ரீ, சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நடத்தி வைத்து அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.நேற்று குண்டம் திருவிழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூ மிதித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவை காமாட்சி புரி ஆதினம், 51 சக்தி பீடம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்..