சிங்கப்பூரில் படிக்க இடம் வாங்கி தருவதாக கல்லூரி பேராசிரியையிடம் பணம் மோசடி.!!

கோவை, பீளமேடு நம்புரார் வீதியைச் சேர்ந்தவர் சாரா பாஜ். இவரது மனைவி அருணா ( வயது 42 ) கோவையில்  உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மேல் படிப்பு படிப்பதற்கு விரும்பினார் . இது பற்றி தடாகம் ரோடு சரவணன் நகரில் வசிக்கும் ராஜ்குமார் (வயது 39) என்பவரிடம் கூறினார் . அவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் மேற்படிப்பு படிப்பதற்கு இடம் வாங்கி தருவதாக கூறினார் . இதை நம்பி அருணா அவரிடம் ரூ 3 லட்சத்து 33 ஆயிரம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்டு கல்லூரியில் இடம் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் . இது குறித்து அருணா, ஆர். எஸ். புரம். போலீசில் புகார் செய்தார். போலீசார் ராஜ்குமார், புவனேஸ்வரி ஆகியோர் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..