போலீசாக நடித்து குட்கா வேட்டை நடத்தி பணம் பறிப்பு… 5 பேர் கைது..!

கோவை :புதுக்கோட்டை மாவட்டம் ,திருமயம் லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் ( வயது 34 ) இவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தில் டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.. இவரது கடைக்கு நேற்று 5 பேர் கொண்ட கும்பல் காரில் சென்றது. தங்களை போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். உங்கள் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. உங்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கைது செய்வோம் என்று மிரட்டினார்கள்… முருகேசன் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவரை மிரட்டி பணப்பெட்டியில் இருந்த 2, 850 ரூபாயை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து முருகேசன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்காடு மாவட்டம் புது நகரை சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 49 )திண்டுக்கல் சுமன் (வயது 42) பாலக்காடு சித்தூர் ஜோசப் ( வயது 55) நல்லிய புள்ளி மோனேஷ் (வயது 22)புதுக்கோட்டை ஆலங்குடி அரிமணம் ஆரோக்கியதாஸ் ( வயது 53) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், வழிப்பறி,மோசடி உட்பட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..