கோவையில் 167 கிலோ குட்காவுடன் வியாபாரி கைது..!

கோவை டாட்டாபாத், ஓஸ்மின் நகரை சேர்ந்தவர் நிக்சன் (வயது 44) வியாபாரி. இவரை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே வைத்து சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினார். அப்போது 167 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன . இதன் மதிப்பு ரூ 1 லட்சத்து 31 ஆயிரத்து 534 இருக்கும். இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..