காதலன் பேசாததால்… கோவை கல்லூரி மாணவி தற்கொலை..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நம்பர் 4 வீரபாண்டி, அண்ணா நகரை சேர்ந்தவர் அந்தோணி ஜெய்சன். இவரது மகள் கார்த்திகா ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பிகாம் சி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார் . இவர் ஒரு வாலிபருடன் காதல் வைத்து இருந்தாராம் . அந்த வாலிபர் இவருடன் சில நாட்களாக பேசவில்லை. இதனால் மனம் உடைந்த கார்த்திகா நேற்று அவரது வீட்டில் விட்டத்தில் சேலையை கட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் சாந்தி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.