மக்களே உஷார்!! மறந்தும் இந்த மாத்திரைகளை வாங்காதீர் ஆபத்து – மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை.!!

‘மெக் லைஃப் சயின்சஸ்’ நிறுவனத்தின் மாத்திரைகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களை, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது.

இந்த மாத்திரைகள் போலியானவை எனத் தெரிவித்துள்ள ஆணையம், சுண்ணாம்புத் தூள் மற்றும் கஞ்சியில் தயாரிக்கப்படுவதால் இது மிகவும் ஆபத்தானது எனக் கூறியுள்ளது.

மேலும் இந்த மாத்திரைகளை ஏற்கெனவே யாரேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.