மதுவில் திராவகம் கலந்து குடித்து கோவை தொழிலதிபர் தற்கொலை..

கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரன் பாளையம், பாலமுருகன் நகரை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 43 )சொந்தமாக கம்பெனி நடத்தி வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மனம் உடைந்த சதீஷ் நேற்று அவரது வீட்டில் பாத்ரூம் சுத்தப்படுத்தக் கூடிய திராவகத்தை மதுவில் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்தார். இது குறித்து அவரது மனைவி சங்கீதா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.