செல்போன் கடை அதிபருக்கு கத்திக்குத்து.!!

கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் தினேஷ் (வயது 29) இவர் அங்குள்ள ராமானுஜம் நகரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையில் இருந்து தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்து 2 பேர் இவரை வழி மறித்தனர். கல்லால் தாக்கி, கத்தியால் குத்தினார்கள். பின்னர் அந்த இரு ஆசாமிகளும் பைக்கில் தப்பி ஓடி விட்டனர். இதில் தினேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..