செல்போன் டவரில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாப பலி..

தென்காசி மாவட்டம் சிவகிரி பக்கம் உள்ள வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் திருமலைசாமி . அவரது மகன் கார்த்திக் ( வயது 32) செல்போன் கோபுரங்களை சுத்தம் செய்யும் தொழில் செய்து வந்தார்.இவர் ஆர்.எஸ். புரம் லோகமானியா ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் டவரில் 15 மீட்டர் உயரத்தில் நின்று சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடிரென்று கால் தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த காயமடைந்த கார்த்திக் அதே இடத்தில் இறந்தார். இது குறித்து ஆர் .எஸ் . புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக டவர் காண்ட்ராக்டரான கோவை வெள்ள கிணறை சேர்ந்த வேலுசாமி (வயது 60) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..