நடுரோட்டில் 3 பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த 4 பேருக்கு தர்ம அடி.!!

கோவை அருகே உள்ள கிணத்துக்கடவை சேர்ந்த 3 பெண்கள் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருகிறார்கள். நேற்று இரவு 7 மணி அளவில் அந்த 3 பேரும் கிணத்துக்கடவு பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் வந்த 4 பேர் அவர்களை வழி மறித்தனர்.நடுரோட்டில் வைத்து அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்தனர்.இதனால் அந்த பெண்கள் சத்தம் போட்டனர். இதைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த பகுதிக்கு ஓடிச்சென்று பெண்களிடம் சில்மிஷத்தித்தில் ஈடுபட்ட 4 பேரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் . போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..