கோவை ஹோட்டலில் பியூட்டி பார்லரில் விபசாரம் – மசாஜ் அழகிகள் உட்பட 3 பேர் கைது.!!

கோவை ராம் நகர், சாஸ்திரி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலின் 3-வது மாடியில் பியூட்டி பார்லர் நடந்து வருகிறது.  இங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பெண்களை வைத்து விபசாரம் நடப்பது தெரியவந்தது .இது தொடர்பாக அதன் உரிமையாளரான வடவள்ளி, வேம்பு அவன்யூவை சேர்ந்த அரவிந்த் (வயது 29)ரத்தினபுரி ,நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த பியூட்டிசியன் மெர்சி ( வயது 23)பாப்பம்பட்டியை சேர்ந்த பியூட்டிசியன் துர்கா (வயது 34) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதுரையைச் சேர்ந்த அரவிந்த் மனைவி முல்லை என்பவர் தப்பி ஓடிவிட்டார். இவரை போலீசார் தேடி வருகிறார்கள்.இந்த பியூட்டி பார்லர் மூடி சீல் வைக்கப்பட்டது..