கோவையில் போதை மாத்திரை, மருந்து கடத்தல் – 3 பேர் கைது..!

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாய்பாபா காலனி மணியம் வேலப்பர் வீதியில் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அவர்களிடம் 2 கிராம் போதை மருந்து, 100 கிராம் எடை கொண்ட 1000 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 6 ஊசி, இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த குணசேகரன் (வயது 24 )இடையர்பாளையம், சரவணா நகரை சேர்ந்த விஷால் என்ற சந்தோஷ் ( வயது 29)வெங்கிட்டபுரம், சாஸ்திரி ரோடுதுரைசாமி என்பது தெரிய வந்தது.இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. 2 பைக்குகள், போதை மருந்து, மாத்திரைகள் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.