கோவை அதிகாரிகளுடன் கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் முக்கிய ஆலோசனை.!!

கோவை : தமிழ்நாடு காவல்துறை (தலைமையிடம்) கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் நேற்று காலை கோவை வந்தார். பின்னர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு போலீஸ் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோவை மாநகரம் , திருப்பூர் மாநகரம் , கோவை சரகம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் போலீசருக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் , காலி பணியிடங்கள் எவ்வளவு உள்ளது? என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து கேட்டறிந்தார்.. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,மேற்கு மண்டல ஐ.ஜி பவானீஸ்வரி, டி.ஐ.ஜி, துணை போலீஸ் கமிஷனர்கள் ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்றனர்.