கோவை ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை..

கோவை மாவட்ட ஆயுதப்படையில் பெண் போலீசாக வேலை பார்த்து வந்தவர் அஞ்சலி ( வயது 27 ) இவர் 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். இவரது கணவர் பெயர் செல்வகுமார். ஆசிரியர்.இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது . குழந்தை இல்லை. இந்த நிலையில் அஞ்சலி 4 நாள் லீவு எடுத்துக் கொண்டு கணவரின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள சூரக்குடிக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க கணவருடன் சென்றிருந்தார்..அங்கு வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காளையார் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..