தென்னையில் குரும்பை உதிர்வதை தடுப்பதற்கான வழிமுறைகள் கல்லூரி மாணவிகள் விளக்கம்..!

மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இறுதி ஆண்டு மாணவிகள் அ.எழிலரசி, திவ்யதர்ஷினி கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் உச்சிப்புளியில் தங்கி கடந்த 1 மாதங்களாக விவசாயிகளுடன் சேர்ந்து பயிற்சி பெற்றுவருகிறார்கள்.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இரட்டையூரணி கிராமத்தில் தென்னையில் குரும்பை உதிர்வதை தடுப்பதற்கான வழிமுறைகளை
விவசாயிகளுக்கு விளக்கினார். அதனை யெடுத்து தென்னைக்கு டி என்.எ யு நுண்ணூட்டச் சத்து எவ்வாறு அளிப்பது என்ற “செயல்முறை விளக்கம்” குறித்து விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி செய்து காட்டினார்கள்..