பூங்காவில் விளையாடும்போது மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பலியான சோகம்..

கோவை சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் ராமன் விகார் என்ற பெயரில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இங்கு மொத்தம் 400 வீடுகள் உள்ளன. இங்கு சிறுவர்கள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பூங்காவில் உள்ள சறுக்கி விளையாடும் கம்பத்தில் ஏரி 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த குழந்தைகள் திடீரென்று கீழே விழுந்தனர்.குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தைகள் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விசாரணையில் இரு குழந்தைகளும் விளையாடும் போது மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது.. இறந்த குழந்தைகள் பெயர் ஜியான்ஸ் ரெட்டி( வயது 4)தந்தை பெயர் பிரசாத் ரெட்டி. தாயார் பெயர் லட்சுமி அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் .மற்றொரு குழந்தையின் பெயர் வியோமா ( வயது 8) தந்தை பெயர் பாலசுப்பிரமணியன், தாய் பெயர் அர்ச்சனா. இது குறித்து போலீசார் மேலும் விசாரித்த போது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பூங்காவின் அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து பக்கத்தில் உள்ள இடத்திற்கு புதிதாக மின் இணைப்பு நிலத்தின் அடியில் கொடுத்துள்ளனர். மழைக்காலம் என்பதால் கம்பியில் மின்சாரம் கசிந்து குழந்தைகள் இறந்து இருப்பதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..