16 வயது சிறுமியை காதலித்து பாலியல் பலாத்காரம்- பெயிண்டர் போக்சோவில் கைது..!

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி.இவரை புலியகுளம பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரைகாதலித்து வந்தாராம்.அந்த சிறுமியை ஆசை வார்த்தை காட்டிஅழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர் .இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்..இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுகோவை மத்திய சிறையில் இன்று அடைக்கப்பட்டார்.