கள்ளக்காதலை கண்டித்த மனைவிக்கு அடி, உதை – கணவர் கைது..!

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், கஞ்சி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் மிதுன் ( வயது 27) பெயிண்டர்.இவருக்கும் வெள்ளலூர் இடையர்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி ( வயது 22) என்பவருக்கும் கடந்த 20 23 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. மிதுன் சொந்த ஊர் திருச்சூர் .திருமணம் முடிந்து 3 மாதத்தில் மிதுனுக்கு மற்றொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருப்பது மனைவி சாந்திக்கு தெரிய வந்தது. இதனால் இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மிதுன் தனது மனைவி சாந்தியை திருச்சூருக்கு வருமாறு அழைத்தார். அதற்கு சாந்தி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மிதுன் மனைவியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கி கீழே தள்ளினார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.. சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன வழக்கு பதிவு செய்து கணவர் மிதுனை நேற்று கைது செய்தார் . இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தாக்குதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..