குட்டையில் மூழ்கி 2 பள்ளி மாணவர்கள் பரிதாப பலி..

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பண்ணைக் கிணறு, மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் மிதுன் ராஜ் (வயது 10) அதே ஊரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வினோத் ( வயது 11) அங்கு உள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். நேற்று முன்தினம் காலையில் இவர்கள் இருவரும் முயல் வேட்டைக்கு சென்றனர். பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை.. இதுகுறித்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் அங்குள்ள காற்றாலை அருகே உள்ள மழை நீர் குட்டையில் இருவரும் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்த பிணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.