கோஷ்டி மோதல்- கல்லூரி மாணவி, வியாபாரி காயம்..!

கோவை சிங்காநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் . இவரது மகள் லக்ஷனா (வயது 18 )கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் தங்கமணி ( வயது 59) இவர் வீட்டின் முன் போடப்பட்டிருந்த வேகத்தடையை கடப்பாரையால் உடைத்துக் கொண்டிருந்தாராம். இதை லக்ஷனா கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த தங்கமணி கடப்பாரையால் லட்சனாவை தாக்கினார்.  இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தங்கமணி மீது வழக்கு பதிவு செய்தனர். இவர் அங்குள்ள உழவர் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.இந்த நிலையில் தங்கமணி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளார். அதில் தன்னை லட்சனா, மணிவேல், மனோஜ், ஹரிஷ் ஆகியோர் தாக்கியதாக கூறியுள்ளார் .இது தொடர்பாக 4பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.