மூடப்பட்ட டாஸ்மாக் கடை அருகே மது விற்பனை : 2 பேர் கைது – 194 பாட்டில் பறிமுதல்..!

கோவை விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.அந்த கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அனுமதி பெறாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் ( 28 ) தஞ்சாவூர் ஒரத்தநாட்டைச் சேர்ந்த மனோஜ் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 194 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. இதை நடத்தி வந்த செந்தில் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.இவரை தேடி வருகிறார்கள்.