திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம்.!!

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் உட்புற தாவரங்களை வழங்கி உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியா் பிரதீப்குமாா் கூறியதாவது இயற்கை சீா்கேடு தொடா்பான முக்கிய பிரச்னைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் காலநிலை மாற்றம் புவி வெப்பமடைதல் காடுகள் அழிப்பு மற்றும் பல்லுயிா் இழப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. உலக சுற்றுச் சூழல் தினத்தின் கருப்பொருள் நில மீட்பு பாலைவனமாதல் மற்றும் வறட்சி தடுப்பு ஆகியவை ஆகும். அதனடிப்படையில் மாவட்ட நிா்வாகத்தால் அரசு அலுவலா்களுக்கு வழங்கப்படும் மரக்கன்றுகள் மற்றும் உட்புற தாவரங்களை நல்ல முறையில் பாதுகாத்து வளா்க்க வேண்டும் என்றாா் அவா். இதனைத் தொடா்ந்து மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடப்பு பருவமழை காலத்தில் 50 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை செயல்படுத்தும் வகையில் மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியம், சனமங்கலம் கிராமத்தில் உள்ள விருட்சக சோலையில் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா் தொடா்ந்து மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் நடவு செய்ய 50 லட்சம் மரக்கன்றுகளை அனுப்பி வைக்கும் பணிகளை தொடங்கி வைத்தாா்.
முன்னதாக அரசு அலுவலா்கள் அனைவரும் ஆட்சியா் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின 2024ஆம் ஆண்டுக்கான உறுதிமொழியேற்றனா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தேவநாதன் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் அதியமான் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.