ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறை கேட்பு முகாம் திருமுல்லைவாயல் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. முகாமில் போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் கி. சங்கர் தலைமையில் நடந்தது .பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டு அறிந்து 50 புகார் மனுக்களை பெற்று உடனடியாக உரிய அதிகாரிகள் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக்குறை தீர்க்கும் முகாமில் துணை ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் உட்பட அனைத்து அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இக்குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்பட்டு பொதுமக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகள் மூலம் துரித விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார். இதை கேள்விப்பட்ட ரவுடிகளும் பிராடுகளும் மோசடி பேர்வழிகளும் ஓடுங்கடா கமிஷனர் நம்மை சுட்டு பூடுவார் பயமாக இருக்குடா என அலறுகின்றனர்..
Leave a Reply