குட்கா விற்ற பெண் கைது..!

கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகாநாதன் வேட்டைக்காரன் புதூர், மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 760 கிராம் குட்கா மறைத்து வைத்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அந்த பெண் கைது செய்யப்பட்டார்.விசாரணையில்அவர் வேட்டைக்காரன் புதூர் மணி மனைவி புஷ்பா (வயது 55) என்பது தெரியவந்தது.. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.