ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு – தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை..

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் வடவள்ளி ரோட்டில் உள்ள நீலியம்மன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37 )தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு ஆன்லைனில் சூதாடும் பழக்கம் இருந்து வந்தது. இதில் ஏராளமான பணத்தை இழந்தார் இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவரது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இவரது தாயார் மல்லிகா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.