மேம்பாலம் சுவரில் பைக் மோதி வாலிபர் பரிதாப பலி – மற்றொருவர் படுகாயம்..

கோவை : கேரள மாநிலம், பாலக்காடு பக்கம் உள்ள சிரக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாரதி. இவரது மகன் ராகுல் (வயது 21) நேற்று தனது நண்பர் அபிசீதாஸ் (வயது 22 ) என்பவருடன் கோவைக்கு வந்தார். பைக்கை ராகுல் ஓட்டினார். கோவை பீளமேடு மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென்று நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மேம்பால சுவரில் மோதியது. இதில் பைக் ஓட்டி வந்த ராகுல் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .பின்னால் இருந்த அபி சித்தாஸ் படுகாயம் அடைந்தார் .இவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தங்கமணி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்..