அண்ணாமலை புகைப்படத்தை ஆட்டுக்கு அணிவித்து கொடூரமாக வெட்டிய திமுக வினர் : பா.ஜ.க பிரமுகருக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்க கோவை காவல் ஆணையரிடம் புகார்.!

கோவை மாநகர், மாவட்ட பா.ஜ.க வினர் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம் தலைமையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் கூறும்போது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே நடுரோட்டில் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை ஆட்டுக் குட்டிக்கு அணிவித்து அந்த ஆட்டின் தலையை நடுரோட்டில் வைத்து கொடூரமாக வெட்டியது. இதனை பா.ஜ.க மாநில பொதுச் செயலாளராக உள்ள ஏ.பி முருகானந்தம் அவரது சமூக வலைதள பக்கமான முகநூலில் பதிவு செய்தார். அதனை தேவராஜ் என்னும் முகநூல் பக்கத்தில் உள்ள நபர் தகாத வார்த்தைகளால் திட்டி கழுத்தை துண்டாக வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். அந்த கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறி உள்ளார்.