13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் – தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்..!

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30) கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின் பேரில்இவரை செல்வபுரம் போலீசார்போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் .இது தொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராம்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் .இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரசிதா பேகம் ஆஜராகி வாதாடினார்..