பைக் மோதி முதியவர் பரிதாப பலி..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் சி. காலனியை சேர்ந்தவர் தஸ்தகீர் பாட்ஷா ( வயது 65) இவர் நேற்று பொள்ளாச்சி -பாலக்காடு ரோட்டில் நடந்து சென்றார். அங்குள்ள செடி முத்தூர் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் தஸ்தகீர் பாட்ஷா படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி ரஷியா பேகம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக பைக் ஓட்டி வந்த மண்ணூர், நரசிங்கபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் ( வயது 41) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..