பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது மண் சரிந்து தொழிலாளி உயிரோடு பலியான சோகம்..

கோவை : தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா குப்பனூரை சேர்ந்தவர்கள் கோவிந்தன் ( வயது 42 )கோவிந்தராஜ் ( வயது 42)இவர்கள் இருவரும் கோவையில் பாதாளை சாக்கடை அமைக்கும் திட்டத்தில்கூலி வேலை செய்து வருகிறார்கள்.நேற்று ஆர்.எஸ். புரம் தியாகி குமரன் மீது பாதாள சாக்கடைக்கு குழி தோண்டும் போது மண் சரிந்து கோவிந்தராஜ், கோவிந்தன், இருவரும் சிக்கினார்கள்.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.அவர்கள் வரைந்து வந்து மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்டனர் .இவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு கோவிந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.கோவிந்தராஜ் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்..இது தொடர்பாக ஆர். எஸ். புரம் போலீசார் காண்டிராக்டர் சுந்தரம் | சூப்பர்வைசர் சிவராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.