பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் – முதல்வர் உத்தரவு..!

சென்னை: மன்னார்குடி அருகே வெள்ளங்குழியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த சதீஷ்குமார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

“சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.