சேவல் சண்டை சூதாட்டம் – 8 பேர் கைது..!

கோவை மாவட்டம் காரமடை வனப்பகுதியில்சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக காரமடை போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மகாதேவபுரம் தினேஷ் ( வயது24 )சுக்கு காபி கடை கார்த்தி (வயது 28 )தேக்கம்பட்டி குருநாதன் ( வயது23) நெல்லித்துறை ரோடு அருண்குமார் (வயது30) மகாதேவபுரம் விக்னேஷ் (வயது 23) எஸ் .எம் .நகர் யாசர் அராபத் (வயது 32) சிவன்புரம் காலனி சுப்ரமணி (வயது43) சத்தியமூர்த்தி நகர் ஜெயக்குமார் (வயது 29 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 7 பைக்குகள் ,5 சேவல்கள் ,பணம் ரூ. 2,200பறிமுதல் செய்யப்பட்டது.