எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை..

கோவை , பங்கஜா மில் ரோட்டை சேர்ந்தவர்சேர்ந்தவர் வைத்தியலிங்கம். அவரது மகள் அபிநயா ( வயது 22) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவர் அவரது வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.