நகைக் கடையில் திருட்டு – பயங்கர கொள்ளையன் கைது..!

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆவடி முத்தா புதுப்பேட்டையில் நகை கடையில் ராஜஸ்தானை சேர்ந்த பயங்கர கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கடையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர் .இந்த சம்பவம் தொடர்பாக முத்தா புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து 1.தினேஷ்குமார்2. செட்னா ராம் 3.அசோக்4. சுரேஷ்5. பஜன்லால் ஆகியோரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் நான்கு கிலோ வெள்ளி ரொக்க பணம் 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி பயங்கர கொள்ளையன் போராராம் என்பவனை கைது செய்து அவனிடமிருந்து 238 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன .கைது செய்யப்பட்ட அவன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்..