கல்லூரி மாணவி குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபர் மீது வழக்குபதிவு..!

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சினேகா ( வயது 20) பி. எஸ் சி . மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று அவரது வீட்டில் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார். இதை அதே பகுதியில் வசிக்கும் அஜ்மல் என்பவர் எட்டிப் பார்த்தாராம். இதை கவனித்த மாணவி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே அஜ்மல் அந்த மாணவியை திட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார் . இது குறித்து சினேகா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் அஜ்மல் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.