கார் திருட்டு கும்பல் கைது..!

கோவை :கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நவாஸ் ( வயது 43 )இவர் தனது உறவினர்களுடன் 2 காரில் கோவை வந்தார் .பின்னர் அவர்கள் அனைவரும் செல்வபுரத்தில் உள்ள ஒரு பேக்கரி முன் கார்களை நிறுத்தி விட்டு சென்றனர். திரும்பி வந்து பார்த்தபோது அந்த 2 கார்களையும் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .அவற்றின் மதிப்பு ரூ. 14 லட்சம் இருக்கும். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர் .போலீசார் வழக்கு பதிவு செய்து கோவையைச் சேர்ந்த அசாருதீன் ,முகமது யாசர் ,முகமது யூசுப், ஜான் சுந்தர் ஆகியோரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கார்களை திருடி சென்றதும், அந்த கார்களுக்கு வேறு நிற பெயிண்ட் அடித்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.அவர்களிடமிருந்து 2 கார்கள் மீட்கப்பட்டது. .எனவே அவர்கள் மேலும் இதுபோன்றுஎத்தனை கார்களை திருடி உள்ளனர். அவற்றை யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.