சாலை விபத்தில் ஒரே நாளில் 2 பேர் பலி..

கோவை கிணத்துக்கடவு பக்கம் உள்ள கோவில் பாளையம், யுரேகா நகரில் வசிப்பவர் ரங்கசாமி ( வயது 65) இவர் நேற்று கோவை பொள்ளாச்சி ரோட்டில் காணியாளம்பாளையம் பிரிவு வருகை நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் . இது குறித்து அவரது மகன் ஜீவா மணிகண்டன் கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக கார் ஓட்டி வந்த போத்தனூர் கரும்புக்கடை சவுகார் நகரை சேர்ந்த ஆசிக் அஹமத் (வயது 29) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல கிணத்துக்கடவு பக்கம் உள்ள கல்லங்காட்டு புதூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் பாலகிருஷ்ணன் ( வயது 32 ) இவர் நேற்று கோவை – பொள்ளாச்சி ரோட்டில் தாமரைகுளம் பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து இவரது தாயார் கிருஷ்ணவேணி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த நபரை தேடி வருகிறார்கள்..