கோவையில் கஞ்சா விற்ற வக்கீல் கைது..!

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையம், கோமைய கவுண்டன்பட்டி, கருமாரிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 28 ) இவர் சட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு கோவையில் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று இவர் பீளமேடு உடையாம்பாளையம் அம்மன் கோவில் வீதியில் கஞ்சா விற்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் வக்கீல் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர். இவரிடமிருந்து 120 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.இவர் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்..