திருச்சி உள்பட ஐந்து டெல்டா மாவட்டங்களில் சிப்கார்ட் தொழிற்சாலை..!

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ளூர் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் சாதகமான தொழில்துறை முதலீடுகளுக்கு முயற்சித்து வரும் வர்த்தக அமைப்புகள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளன. இதில் திருவெறும்பூரில் 150 ஏக்கர் பரப்பளவில் புதிய தொழில் பூங்கா அமையவுள்ளது. இது பெல், ஆர்டனன்ஸ் தொழிற்சாலை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுகளைக் கொண்ட ஒரு தொழில்மயமான பகுதி.
திருச்சிக்கு மணப்பாறையில் ஏற்கனவே இன்டஸ்ட்ரியல் ஏரியா இருந்தாலும், திருவெறும்பூரில் அமைக்கப்படுவதால் அண்டை மாவட்டங்களான தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் பயனளிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டாவது சிப்காட் எஸ்டேட் ரூ.225 கோடி முதலீட்டை ஈர்க்கும் என்றும், 3,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தொழில்துறை தெரிவித்துள்ளது.
சிப்காட் இயல்பாகவே தொழில் பூங்காக்களுக்குள் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கும் என்பதால் திருச்சி மாவட்ட சிறு குறு தொழில்கள் சங்கத்தின் (Tiditssia) தலைவர் பி ராஜப்பா வரவேற்றார்.
இப்பகுதியில் தொழில்துறையில் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டாவது சிப்காட் தொழில் பூங்காவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எறையூர் தொழிற்பேட்டை தவிர பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் புதிய தொழிற்பேட்டை அமைக்க சுமார் 100 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. அரியலூர் உடையார்பாளையத்தில் 175 ஏக்கர் பரப்பளவில் முதல் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. திருவாரூரில் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடியில் 2 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதற்காக 150 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கும் சிப்காட் வழங்கப்படலாம்.
குளிர்பதனக் கிடங்கு வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாநில அரசு பரிசீலிக்கலாம், என்று CII திருச்சி மண்டலத்தின் நிலைத்தன்மை குழுவின் தலைவர் வி சிவராமன் தெரிவித்தார்.