திருச்சி அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்..!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் தோளூர்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் இ ஆ ப நேரில் சென்று அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு கற்பிக்கப்படும் முன் பருவ கல்வி முறைகள் பற்றி ஆசிரியர்களிடம் கேட்டறிந்து குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.