விஷம் குடித்து கணவன், மனைவி தற்கொலை..

தேனி மாவட்டம், அன்னஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம் ( வயது 50) விவசாயி இவரது மனைவி வனிதா (வயது 40) இவர்களுக்கு ரமேஷ் குமார் ( வயது 28) என்ற மகன் உள்ளார். இவர் கோவை கிணத்துக்கிடவு அருகே உள்ள கல்லாபுரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அதே பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் சற்குணம் சொந்த ஊரில் அடிக்கடி மது குடித்து வந்ததால் ரமேஷ் குமார் தனது தந்தை சற்குணம் தாயார் அனிதா ஆகியோரை கல்லாபுரத்துக்கு அழைத்து வந்தார். இதை அடுத்து சற்குணமும் ரமேஷ் குமாரும் விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தந்தை சற்குணத்தால் குடிப்பழக்கத்தை விட முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தென்னை மரத்திற்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை எடுத்துக் குடித்தார். இதை அவரின் மனைவியிடம் தெரிவித்தார் .இதை யடுத்து வனிதாவும் அதே விஷத்தை குடித்தார் .இருவரும் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இருவரும் இறந்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தம்பதி ஜோடியாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.