கோவை தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது.!!

கோவை வடவள்ளி அருகே “டெல்லி பப்ளிக் ஸ்கூல் ” என்ற தனியார் பள்ளிக்கூடம் உள்ளது..இந்த பள்ளியில் 800 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நூலக (லைபரரி)பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ் ( வயது 30) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். நாளுக்கு நாள் அவரது தொல்லை தாங்க முடியாமல் மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் உடனே பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர் பால்ராஜ் பணி நீக்கம் செய்யப்பட்டார் .இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி, குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் புகார்கள் சென்றன. இதைத் தொடர்ந்து அவர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மாணவிகளிடம் தனித்தனியாக நடந்த விசாரணையில் மேலும் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது . இதை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிருந்தா சம்பவம் குறித்து ஆர். எஸ். புரம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் போக் சோசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் பால்ராஜை கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..