பாரதியார் பல்கலைக்கழகம் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மாணவர் சுபாஷ் . இவர் கோவை வடவள்ளி அருகே உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் தங்கி உள்ளார் . அவருடன் அந்த துறையை சார்ந்த 6 மாணவர்கள் அறையில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் சக மாணவர்கள் கல்லூரிக்கு சென்ற நிலையில் சுபாஷ் மட்டும் தனியாக அறையில் தங்கி இருந்துள்ளார். அந்த நேரத்தில் பெட் சீட்டை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது..