வங்கி ஏடிஎம் மையத்தில் திருடியவர் கைது..!

கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பழைய தபால் நிலையம் அருகே கனரா வங்கி ஏடிஎம் மையம் உள்ளது.நேற்று இரவு இந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த ஒரு ஆசாமி அங்கிருந்த யுபிஎஸ் பேட்டரிகளை திருடிக் கொண்டு ஓட முயன்றார்.அவரை கையும் களமாக பிடித்து கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் பாப்பநாயக்கன்பாளையம்,செங்காடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ( வயது 45) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 4 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டது .