இளம்பெண்ணிடம் நகை, பணம் மோசடி- அத்தை, மாமா மீது புகார்..!!

கோவை சுந்தராபுரம், செட்டியார் காலனி சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகள் திவ்யா ( வயது 23 )பிகாம் பட்டதாரி இவரது தாயும் , தந்தையும் இறந்து விட்டார்கள். இதனால் இவர் நரசிம்மபுரம் மேட்டுக்காட்டில் உள்ளதனது பாட்டி வீட்டில் மாமாவுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார்.. இந்த நிலையில் 20 22 ஆம் ஆண்டில் இவரது பாட்டியும் இறந்து விட்டார்.இதன் பிறகு அவரது மாமா திவ்யாவை வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறினார்.திவ்யா அவரிடம் தனது தாயாரின் வீட்டை தனக்கு தருமாறு கூறினார்.வீட்டை திவ்யாவுக்கு கொடுக்கவில்லை. அதை வாடைக்கு கொடுத்து விட்டார் மேலும் அவரது தாயாரின் 7பவுன் நகைகள் ,பணம் ரூ. 90 ஆயிரம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்டார். இதைக் கேட்ட போது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து திவ்யா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் அவரது மாமா சுரேஷ், அத்தை பிரியா ஆகியோர் மீது மோசடி உட்பட 4 பிரிவின் மேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..