தமிழக உள்துறை செயலாளர் அமுதா, மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

மிழக உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணன் உணவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உணவுத்துறை செயலாளராக இருந்த கோபால் கால்நடைத்துறை, மீன்வளத்துறை செயலாளராக நியமனம். பள்ளிக்கல்வித்துறையின் புதிய செயலாளராக மதுமதி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.