திருவள்ளூரில் நாளை சனிக்கிழமை மின்சாரம் நிறுத்தம்.!!

திருவள்ளூர்: மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய சேர்மன் ராஜேஷ் லகானி ஆகியோர் இணைந்து தமிழகத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பாமர மக்களும் நடுத்தர மக்களும் தடை இன்றி மின்சாரம் பெற்றிடவும் தொழிற்சாலைகளும் வர்த்தக நிறுவனங்களும் மின்தடை இன்றி வர்த்தகத்தை பெருக்கிடவும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளை முழுமையாக செய்திட்டு மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திட உத்தரவு பிறப்பித்து இருந்தனர் . அதன் பேரில் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட தலைமை பொறியாளர் சந்திரசேகர் திருவள்ளூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் இணைந்து நேரடி மேற்பார்வையில் காக்களூர் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காக்களூர் ஹவுசிங் போர்டு காக்களூர் தொழிற்u பேட்டை காக்களூர் மற்றும் சி சி சி பின்புறம் பூண்டி புல்ல ரம்பாக்கம் செவ்வாய்பேட்டை ஒதப்பை மிஞ்சிவா நகர் தண்ணீர் குளம் என் ஜி ஓ நகர் ஈக்காடு ஒ திக்காடு தலக்காஞ்சேரி திருவள்ளூர் நகரத்தில் உள்ள ஜே என் சாலை பெரும்பாக்கம் ஐசிஎம்ஆர் பின்புறம் எம்ஜிஎம் நகர் கொண்டமபுரம் சத்தியமூர்த்தி தெரு சீவி நாயுடு சாலை ஜவகர் நகர் எடப்பாளையம் நேதாஜி சாலை விஎம் நகர் ஜெயா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒட்டியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் முன்னிலையில் நிறுத்தப்படுகிறது..