சவுக்கு சங்கர் -பெலிக்ஸ் ஜெரால்டு கோவை கோர்ட்டில் ஆஜர்.!!

கோவை : பெண்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ” யூடியூபர் “சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சவுக்கு சங்கரை சென்னை சிறையிலும் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர் .கோவையில் பதிவான வழக்கில் 2 பேருக்கும் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று பலத்த பாதுகாப்புடன் கோவை அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் கோவை 4 – வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களுக்கு 55 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. இந்த வழக்கை வருகிற 30-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார் . இதையடுத்து சவுக்கு சங்கர் சென்னை சிறைக்கும், பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சி சிறைக்கும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்..